ஜெ.தீபா பேரவையை அரசியல் அமைப்பாக மாற்ற நடவடிக்கை

தேர்தல்களில் போட்டியிடும் வகையில் ஜெ.தீபா பேரவையை நிலையான அரசியல் அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் ஜே. தீபா தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தேர்தல்களில் போட்டியிடும் வகையில் ஜெ.தீபா பேரவையை நிலையான அரசியல் அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் ஜே. தீபா தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா ஜே தீபா பேரவை சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜே தீபா கலந்து கொண்டார். அப்போது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஓர் ஆண்டுகாலமாக பேரவையாக நடத்தி வருகிறோம். தேர்தலில் நிற்க மற்றும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மிக விரைவில் பேரவையை நிலையான அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எடப்பாடி தலைமையிலான ஆட்சி, ஒரு ஆட்சி என சொல்லமுடியாது, இது பெரும்பான்மையற்றது. மத்திய அரசால் இயக்கப்படும் ஆட்சியாகும். என்றார். 

மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நடிகர்கள் பல பேர் முன்னதாகவே அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்களின் கட்சியானது முழுமையாக அவர்களால் இயக்கப்பட வேண்டும். மத்திய அரசாலோ, மற்ற கட்சிகளாலோ இயக்கப்படக் கூடாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தின் நீதி விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதில்களே அளிக்கப்பட்டு வருகின்றனர். சசிகலா அணியினரின் தலையீடு அதிகபட்சமாக இருக்கிறது. எனக் கூறினார். 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...