சிறப்பு கட்டண ரயில்களின் வழித்தடம் மாற்றியமைப்பு

கோடை சீசனையொட்டி திருநெல்வேலி, செங்கோட்டைக்கு விடப்பட்ட ரயில்களின் சேவைகளை கிணத்துக்கிடவு வழியாக மாற்றியமைத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : கோடை சீசனையொட்டி திருநெல்வேலி, செங்கோட்டைக்கு விடப்பட்ட ரயில்களின் சேவைகளை கிணத்துக்கிடவு வழியாக மாற்றியமைத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை சீசனையொட்டி கோவையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கடந்த 23-ம் தேதி முதல் கோவையில் இருந்து இயக்கப்பட்டு வரும் இந்த ரயில்கள், கேரளா வழியாக செல்கின்றன. இதற்கு பல்வேறு தரப்பினர் இணையதளத்தின் மூலமாக மத்திய அரசை வறுத்தெடுத்ததுடன், திருநெல்வேலி, செங்கோட்டை செல்லும் ரயில்கள் தொலைதூரம் செல்வதாகப் புகார் தெரிவித்தனர். எனவே, பயண நேரத்தை குறைக்கும் விதமாக கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக சிறப்பு கட்டண ரயில்களை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தெற்கு ரயில்வே, திருநெல்வேலி, செங்கோட்டைக்கு விடப்பட்ட ரயில்களின் சேவைகளை கிணத்துக்கடவு ரயில்நிலையம் வழியாக மாற்றியமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 2 மணிநேரம் பயணநேரம் சேமிக்கப்படுகிறது. திங்கட்கிழமை தோறும், கோவையில் இருந்து சிறப்பு ரயில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09.20 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. இதேபோல, செவ்வாய்கிழமையன்று செங்கோட்டையில் இருந்து மாலை 05.00 மணிக்கு கிளம்பும் அந்த ரயில், மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு கோவை வந்தடைகிறது. 

கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை இரவு 11.50 புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 08.35 மணிக்கு சென்றடைகிறது. மாதந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 04.30 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்தச் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...