காஞ்சி சங்கரமடத்தின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம்

காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயந்திரர் காலமானதையடுத்து, இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் 70-வது மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதியாக இருந்த ஜெயந்திரர் காலமானதையடுத்து, இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் 70-வது மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் தலைமை மடாதிபதியாக இருந்த ஜெயேந்திரர் கடந்த மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் மடத்தின் உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் அடுத்த மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சங்கர மடத்தின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ள விஜயேந்திரருக்கு தற்போது 49 வயதாகிறது. 

இவரது இயற்பெயர் சங்கர நாராயணன். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலம் எனும் கிராமத்தில் இவர் 1969-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந்தேதி பிறந்தார். 14 வயதிலேயே மடத்துக்கு வந்து விட்டதால் சங்கர மடத்தின் அனைத்துப் பணிகளிலும் இவருக்கு அதிகமான அனுபவம் உள்ளது. இவர் இளைய பீடாதிபதியாக பதவி ஏற்ற உடனேயே  சந்திரசேகரேந்திர சுவாமிகள் மீது பத்து சுலோகம் அடங்கிய “தசகம்“ எழுதினார்.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஸ்ரீவிஜயேந்திர பெயரும் சேர்க்கப்பட்டது. 25-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதற்காக 2005-ல் கைதாகி விடுதலையானார். 

கடந்த ஜனவரி மாதம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்து இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்தை வேண்டும் என்றே அவர் அவமதித்ததாக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி ஆன்மிக பெரியவர்களும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...