நீலகிரியில் மெகா காய்கறி சந்தை அமைக்க தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களுக்குத் தீர்வு காணும் வகையில், மாபெரும் காய்கறி சந்தை அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்பது அம்மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களுக்குத் தீர்வு காணும் வகையில், மாபெரும் காய்கறி சந்தை அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்பது அம்மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மற்றும் மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ், சைனீஸ் காய்கறிகள் என பல்வேறு காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இந்த மலை தோட்ட காய்கறிகள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் மவுசு அதிகம்.



இந்நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் மலை தோட்ட காய்கறிகள் தினசரி லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் சந்தையில் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ் உட்பட காய்கறிகளும் ஏலம் விடப்படும் நிலையில், முன் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் விளை பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. மதியம் 12 மணிக்குள் உதகையில் இருந்து மலை காய்கறிகளை மேட்டுப்பாளையம் சந்தைக்கு சென்று விட வேண்டும். இதனால், போதிய நேரமின்மை, கூலியாட்கள் செலவு என மூதலிட்டு வருமானமே கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலையடைகின்றனர்.



எனவே, நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஒரு மெகா காய்கறி சந்தையை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.



இதுகுறித்து விவசாயி பிரகாஷ் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் விளையக் கூடிய மலை தோட்ட காய்கறிகளை மேட்டுப்பாளையம் சந்தைக்கு எடுத்து சென்று ஏலம் விட வேண்டிய நிலை இருப்பதால் லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலி என நாங்கள் போட்ட முதலீடு கூட கிடைப்பதில்லை. எனவே, மாவட்டத்தில் ஒரு மெகா காய்கறி ஏலச் சந்தையை அமைக்கும் முயற்சியை அரசு எடுக்க வேண்டும்," என்றார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...