நாமக்கல் வழியாக விரைவு ரயில்கள் இயக்கம்

பொதுமக்களின் நீண்ட கோரிக்கையை ஏற்று நாமக்கல் வழியாக விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

கோவை : பொதுமக்களின் நீண்ட கோரிக்கையை ஏற்று நாமக்கல் வழியாக விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் வழியாக விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்று, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு ஈரோடு வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள், நாமக்கல் வழியாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் - ஒஹா (குஜராத்) வரை செல்லும் ராமேஸ்வரம் விரைவு ரயில் (எண் : 16733/16734) மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண் : 12689/12690) ஆகியவை நாமக்கல் வழியாக இயக்கப்பட உள்ளது. 

ஒஹாவில் (குஜராத்) இருந்து ராமேஸ்வரம் விரைவு ரயில் (எண் : 16733/16734) வரும் 6-ம் தேதியில் இருந்தும், ராமேஸ்வரத்தில் இருந்து 9-ம் தேதியில் இருந்தும் இந்த ரயில்சேவை மாற்றி இயக்கப்படுகிறது. 

இதேபோல, சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண் : 12689/12690) 9-ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும், 11-ம் தேதி முதல் நாகர்கோவில் ரயில்நிலையத்தில் இருந்தும் மாற்றியமைக்கப்பட உள்ளது. 

அதிவேக விரைவு ரயிலாக மாறிய சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ்

சென்னை எக்மோர் - சேலம் வரை இயக்கப்படும் ஸ்லிப் கோச் சேவையை வழங்கி வந்த சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் : 11063/11064), சென்னை எக்மோர் அதிவிரைவு ரயிலாக (ரயில் எண் : 22153/22154) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

வரும் 5-ம் தேதி முதல் சென்னை எக்மோரில் இருந்தும், 6-ம் தேதி முதல் சேலத்தில் இருந்து சென்னை எக்மோர் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...