"மாணவர்களுக்கான ஹெல்ப்-லைன்" : 4,214 அழைப்புகள் வந்ததாக அமைச்சர் விளக்கம்

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மாணவர்களுக்கான உதவி மைய எண் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், நேற்று இரவு 10 மணி வரையிலும் 4,214 மாணவர்கள் உதவி மையத்தை தொடர்புக்கொண்டு தங்களுக்கு தேவையான கருத்துக்களை கேட்டறிந்து உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


கோவை : இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மாணவர்களுக்கான உதவி மைய எண் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும்,  நேற்று இரவு 10 மணி வரையிலும் 4,214 மாணவர்கள் உதவி மையத்தை  தொடர்புக்கொண்டு தங்களுக்கு  தேவையான கருத்துக்களை கேட்டறிந்து உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பிட்ட காலத்திற்குள் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் 14417 என்ற புதிய உதவி மைய எண் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த உதவி மையத்திற்கு நேற்று இரவு 10 மணி வரை 4,214 அழைப்புகள் வந்துள்ளன. அதில் மாணவர்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு  தேவையான கருத்துக்களை கேட்டனர். அதில் 1742 பேருக்கு விடையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எந்த கல்வி பாடத்தை தேர்ந்தெடுக்கலாம்  என்பது உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் வகையில் உதவி மைய எண் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை சரி செய்வதற்காக  ஸ்நேகா என்ற தனியார் நிறுவனம் மூலமாக மாணவர்களின் வீட்டிலேயே சென்று மாணவர்களுக்கு கவுன்ஸ்லிங் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்க உள்ளது.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், பள்ளிக்கு தவறாமல் வரும் மாணவர்கள் சமூக சேவை செய்யும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அரசின் சார்பில் ஊக்கம் மற்றும்  ஆக்கத்தையும் தருவது தொடர்பாக  பரிசீலிக்கப்பட்டு வருகிறது." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...