திருப்பூர் அருகே காலதாமதமாக இயக்கபடுவதாக கூறி பயணிகள் திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் அருகே காலதாமதமாக இயக்கபடுவதாக கூறி பயணிகள் திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலக்காட்டில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் வழியாக திருச்சி வரை பயணிகள் ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
காலை 9.15 மணிக்கு திருப்பூருக்கு வந்து சேரும் பயணிகள் ரயிலை வங்கி மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கோவையில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்ற பின் இயக்கப்பட்டுவந்தால் உரிய நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே இன்று காலை வழக்கம் போல் கோவையில் இருந்து கிளம்பிய ரயில் திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வந்ததை அடுத்து ஆத்திரம் அடைந்த பயணிகள் நூற்றுக் கணக்கானோர் ரயில் இஞ்சின் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.

பயணிகளின் திடீர் ரயில் மறியல் காரணமாக ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மற்றும் பாலக்காடு பயணிகள் ரயில் ஆகியவை வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் கோவை திருப்பூர் இடையையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதனிடையே, மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறை மற்றும் அனுப்பர்பாளையம் காவல்துறையினர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், உரிய நேரத்தில் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பரிந்துறை செய்வதாக உறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு பயணிகள் கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்ட ரயிலகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்பட்டன.
பயணிகளின் திடீர் ரயில் மறியல் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டதால் வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பாலக்காட்டில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் வழியாக திருச்சி வரை பயணிகள் ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
காலை 9.15 மணிக்கு திருப்பூருக்கு வந்து சேரும் பயணிகள் ரயிலை வங்கி மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கோவையில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்ற பின் இயக்கப்பட்டுவந்தால் உரிய நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே இன்று காலை வழக்கம் போல் கோவையில் இருந்து கிளம்பிய ரயில் திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வந்ததை அடுத்து ஆத்திரம் அடைந்த பயணிகள் நூற்றுக் கணக்கானோர் ரயில் இஞ்சின் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.

பயணிகளின் திடீர் ரயில் மறியல் காரணமாக ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மற்றும் பாலக்காடு பயணிகள் ரயில் ஆகியவை வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் கோவை திருப்பூர் இடையையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதனிடையே, மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறை மற்றும் அனுப்பர்பாளையம் காவல்துறையினர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், உரிய நேரத்தில் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பரிந்துறை செய்வதாக உறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு பயணிகள் கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்ட ரயிலகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்பட்டன.
பயணிகளின் திடீர் ரயில் மறியல் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டதால் வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.