காலதாமதமாக இயக்கப்படுவதாக கூறி ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள்

திருப்பூர் அருகே காலதாமதமாக இயக்கபடுவதாக கூறி பயணிகள் திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் அருகே காலதாமதமாக இயக்கபடுவதாக கூறி பயணிகள் திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலக்காட்டில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் வழியாக திருச்சி வரை பயணிகள் ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. 

காலை 9.15 மணிக்கு திருப்பூருக்கு வந்து சேரும் பயணிகள் ரயிலை வங்கி மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த சில தினங்களாக கோவையில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்ற பின் இயக்கப்பட்டுவந்தால் உரிய நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர். 

இதனிடையே இன்று காலை வழக்கம் போல் கோவையில் இருந்து கிளம்பிய ரயில் திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

மேலும், ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வந்ததை அடுத்து ஆத்திரம் அடைந்த பயணிகள் நூற்றுக் கணக்கானோர் ரயில் இஞ்சின் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். 



பயணிகளின் திடீர் ரயில் மறியல் காரணமாக ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மற்றும் பாலக்காடு பயணிகள் ரயில் ஆகியவை வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் கோவை திருப்பூர் இடையையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 

இதனிடையே, மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறை மற்றும் அனுப்பர்பாளையம் காவல்துறையினர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



மேலும், உரிய நேரத்தில் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பரிந்துறை செய்வதாக உறுதி அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு பயணிகள் கலைந்து சென்றனர். 

இதனைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்ட ரயிலகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்பட்டன. 

பயணிகளின் திடீர் ரயில் மறியல் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டதால் வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...