மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வருகிற 8-ந்தேதி மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வருகிற 8-ந்தேதி மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். இந்தக் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்ற பணிகளில் கமலஹாசன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கமல் நியமித்த 15 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவினர் இதற்கான பணிகளை செய்து வருகிறார்கள். கட்சி தொடங்கிய 48 மணி நேரத்திலேயே 2 லட்சத்து ஆயிரத்து 597 பேர் உறுப்பினர்களாக சேர்ந்ததாக அறிவித்துள்ளார். 

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பெண் தொழில் முனைவோர் 500 பேர் ஆழ்வார்பேட்டையில் கமலஹாசனை சந்தித்து மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களை வரவேற்ற கமல், பெண்கள் சமூக வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பதாகப் பாராட்டினார். மேலும், தனது கட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.

இதனிடையே, 10 பேர் கொண்ட பேச்சாளர்கள் பட்டியலை கமல் நேற்று வெளியிட்டார். அந்தப் பட்டியலில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதிகிருஷ்ணகுமார், தயாரிப்பாளர் கமீலா நாசர், பேராசிரியர் கு.ஞான சம்பந்தன், இயக்குனர் முரளி அப்பாஸ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரங்கராஜன், தொழில் அதிபர்கள் சிவராமன், சவுரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா, கவிஞர் சிநேகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில், கவிஞர் சிநேகன், முரளி அப்பாஸ் தவிர மற்ற 8 பேரும் உயர் மட்ட குழுவிலும் இருக்கின்றனர். பெண்களை அதிக அளவில் திரட்டவும் ஏற்பாடு செய்கின்றனர். இதன் ஒருகட்டமாக சர்வதேச மகளிர் தினத்தை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். 

இதையொட்டி, வருகிற 8-ந்தேதி சென்னை ஆழ்வார்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கமல் கட்சி தொடங்கிய பிறகு சென்னையில் நடத்தப்படும் முதல் பொதுக் கூட்டமும் கமல் சென்னையில் பேசப் போகும் முதல் பொதுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...