கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை: கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:- கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு அளிப்போர், வேலை தேடுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதம் மட்டும் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடைபெறாமல், அதற்குப் பதிலாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.00 வரை சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில், 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து இளங்கலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், ஐடிஐ படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் என அனைத்து கல்வித் தகுதி உடையப் பெண்களுக்கு சிறப்பு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது, இதன்மூலம் வேலைபெறும் பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இப்பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து மகளிரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்றார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:- கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு அளிப்போர், வேலை தேடுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதம் மட்டும் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடைபெறாமல், அதற்குப் பதிலாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.00 வரை சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில், 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து இளங்கலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், ஐடிஐ படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் என அனைத்து கல்வித் தகுதி உடையப் பெண்களுக்கு சிறப்பு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது, இதன்மூலம் வேலைபெறும் பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இப்பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து மகளிரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்றார்.