மகளிர் தினத்தையொட்டி 8-ம் தேதி மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை: கோவையில் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:- கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு அளிப்போர், வேலை தேடுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதம் மட்டும் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடைபெறாமல், அதற்குப் பதிலாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் 8-ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.00 வரை சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில், 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அனைத்து இளங்கலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், ஐடிஐ படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள் என அனைத்து கல்வித் தகுதி உடையப் பெண்களுக்கு சிறப்பு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது, இதன்மூலம் வேலைபெறும் பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும், இப்பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து மகளிரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...