கர்நாடகாவில் வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: சித்தராமையா அழைப்பு

காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த மாதம் 22-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு ஒருமித்த குரல் கொடுத்தனர். கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வருகிற வாரம் இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என முறையிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காவிரி தீர்ப்பு குறித்து ஆலோசிக்க வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடக நலனைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...