சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட பச்சைக்கிளிகளை மீட்ட வனத்துறை

கோவையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட பெரிய பச்சைக்கிளிகளை வனத்துறையினர் மீட்டனர்.


கோவை: கோவையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட பெரிய பச்சைக்கிளிகளை வனத்துறையினர் மீட்டனர்.

கோவை மாவட்ட வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பட்டியல் 4-ல் சேர்க்கப்பட்ட 'அலக்சாண்டரின்' வகை பெரிய பச்சைக்கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில், நேற்று முன் தினம் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் விற்பனைக்காக இருந்த 10 பெரிய பச்சைக்கிளிகளை மீட்டனர்.

இது குறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், "இவ்வகை பச்சைக்கிளிகள் கர்நாடக மாநிலத்தில் வாழ்பவை. அழகுக்காக இவற்றை வளர்க்க நினைக்கும் சிலர் இதன் இறகுகள் மற்றும் அலகுகளை வெட்டி விற்பனை செய்கின்றனர். இது சட்ட விரோதமானது." என்றனர்.

மீட்கப்பட்ட பச்சைக்கிளிகள் தற்போது கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பறவைகள் குணமடைந்த பிறகு அவற்றை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்று விட இருப்பதாக தெரிகிறது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...