உதகை வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்க தொட்டிகளில் நீரை நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி: உதகை வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்க தொட்டிகளில் நீரை நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடும் வறட்சி ஏற்படுவது வழக்கம்.
அவ்வாறு வறட்சி ஏற்படும் போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயரும்.

இந்தாண்டு, முன்கூட்டியே சிறியூர், ஆனைக்கட்டு, பொக்காபுரம், மாவெனல்லா, மசினகுடி, மாயார் உள்ளிட்ட வடக்கு வனக்கோட்டத்திற்க்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் வனப்பகுதியை நோக்கி இட பெயரத் துவங்கியுள்ளன. இந்த இடப்பெயர்வை தடுக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் தேக்க தொட்டிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணிரை லாரிகள் மூலம் கொண்டு வந்து நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடும் வறட்சி ஏற்படுவது வழக்கம்.
அவ்வாறு வறட்சி ஏற்படும் போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயரும்.

இந்தாண்டு, முன்கூட்டியே சிறியூர், ஆனைக்கட்டு, பொக்காபுரம், மாவெனல்லா, மசினகுடி, மாயார் உள்ளிட்ட வடக்கு வனக்கோட்டத்திற்க்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் வனப்பகுதியை நோக்கி இட பெயரத் துவங்கியுள்ளன. இந்த இடப்பெயர்வை தடுக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் தேக்க தொட்டிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணிரை லாரிகள் மூலம் கொண்டு வந்து நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
