வன விலங்குகளுக்காக நீரை தேக்கி வைக்கும் பணியில் வனத்துறை

உதகை வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்க தொட்டிகளில் நீரை நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி: உதகை வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்க தொட்டிகளில் நீரை நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடும் வறட்சி ஏற்படுவது வழக்கம்.

அவ்வாறு வறட்சி ஏற்படும் போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயரும்.



இந்தாண்டு, முன்கூட்டியே சிறியூர், ஆனைக்கட்டு, பொக்காபுரம், மாவெனல்லா, மசினகுடி, மாயார் உள்ளிட்ட வடக்கு வனக்கோட்டத்திற்க்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் வனப்பகுதியை நோக்கி இட பெயரத் துவங்கியுள்ளன. இந்த இடப்பெயர்வை தடுக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் தேக்க தொட்டிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணிரை லாரிகள் மூலம் கொண்டு வந்து நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...