குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் அட்டகாசம் : பொதுமக்கள் பீதி

கோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 



வால்பாறை அடுத்துள்ள நல்லமுடி எஸ்டேட் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவு 1.30 மணியளவில் குட்டியுடன் காட்டு யானைகள் நுழைந்தன. இந்த யானைகள் குடியிருப்பு அருகாமையில் உள்ள ரேசன் கடையின் ஜன்னல் கதவுகளை உடைத்து, அரிசி, சர்க்கரை மூட்டைகளை நாசம் செய்தன. இதையறிந்த அருகாமையில் இருந்த தொழிலாளர்கள் காட்டு யானைகள் கூட்டத்தை தீப்பந்தம் காட்டியும், கூச்சலிட்டும் விரட்டினார்கள். யானைகள் அப்போது, சிறிது தூரம் சென்றது. யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக நினைத்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு சென்றனர். 



ஆனால், மீண்டும் அதே காட்டு யானைக் கூட்டம் அதிகாலை 4.00 மணியளவில் அதே ரேசன் கடையை சேதப்படுத்தியது. பொதுமக்கள் விடிய விடிய காட்டு யானைக் கூட்டத்தை விரட்டினர். நேற்று முன்தினமே காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதி வனப்பகுதிக்குள் இருந்தது வனத்துறையினருக்கு தெரிந்திருந்தும், வனத்துறையினர் அலட்சியமாக இருந்ததாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அரசு பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து, காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதியின் அருகாமையில் உள்ள வனப்பகுதிக்குள் முகாமிட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...