மதுரையில் போலீசாரை தாக்கிய இரு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

மதுரையில் போலீஸ் சோதனையின் போது, போலீசாரை தாக்கிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மதுரை : மதுரையில் போலீஸ் சோதனையின் போது, போலீசாரை தாக்கிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிக்கந்தர் சாவடிப் பகுதியில் மாநகர காவல்துறை தனிப்படை போலீசார் ரவுடிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, சில ரவுடிகள் தப்பி ஓடினர். சில ரவுடிகள் போலீசாரை கடுமையாக தாக்கினர்.  இதனால், போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில், ரவுடிகள் மந்திரி (எ) இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் பலியாகி உள்ளதாக முதல் கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இரு ரவுடிகளின் உடல்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு ரவுடிகளின் மீதும் ஏராளமான கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையிலுள்ள மிக முக்கிய நபர் ஒருவரை கொலை செய்ய இரு ரவுடிகளும் திட்டம் தீட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போது மோதல் ஏற்பட்டதால், இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ரவுடிகள் தாக்கியதில் போலீஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், போலீஸ் வருவதை அறிந்த சென்னையை அயானாவரத்தை சேர்ந்த ரவுடியான மாயக்கண்ணன் தப்பிச் சென்று விட்டதாகவும், அவர் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். 

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...