தயாரிப்பாளர்கள் சங்கப் போராட்டத்திற்கு ஆதரவில்லை : திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் : தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 



டிஜிட்டல் சினிமா தயாரிப்பில் விதிக்கப்படும் உள்ளடக்கக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் புதிய திரைப்படங்களை வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு திரைப்பட விநயோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கெடுக்கப் போவதில்லை என திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர்  கூறும்பொழுது :- தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரி குறித்த பிரச்சனைக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அழிந்து வரும் சினிமா தொழிலில் அடிக்கடி வேலைநிறுத்தம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தயாரிப்பாளர்கள் சங்கம் தன்னிச்சையாக அறிவித்த போராட்டத்தில் பங்கெடுக்கப் போவதில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...