வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சிவகங்கையில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கோவை : சிவகங்கையில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

சிவகங்கை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜபாண்டி தலைமையில் வழக்கறிஞர்கள் சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பேருந்தினை மறித்து ஓட்டுநரை, வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜபாண்டி உட்பட வழக்கறிஞர்கள் பலரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த கைது சம்பவத்தைக் கண்டித்து ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும்படி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்தது. இதனை ஏற்று கோவை வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணை எதிலும் பங்கேற்கவில்லை. வழக்குகள் விசாரணையின்றி ஒத்திவைக்கப்பட்டன. வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...