தொழில் துறையினர் திறமைகளை வெளிப்படுத்த முன் வரவேண்டும்

தொழில் துறையினர் திறமைகளை வெளிப்படுத்த தயக்கமின்றி முன் வரவேண்டும் என மிஸ் இந்தியா போட்டியின் பயிற்சியாளர் ருக்‌ஷனா எய்ஸா கூறியுள்ளார்.

கோவை: தொழில் துறையினர் திறமைகளை வெளிப்படுத்த தயக்கமின்றி முன் வரவேண்டும் என மிஸ் இந்தியா போட்டியின் பயிற்சியாளர் ருக்‌ஷனா எய்ஸா கூறியுள்ளார். 



கோவை மாவட்ட என்டர்புயூனர்ஸ் அமைப்பு சார்பில் தொழில்துறையின் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் மிஸ் இந்தியா போட்டியின் அதிகாரப்பூர்வ பயிற்சியாளர் ருக்‌ஷனா எய்ஸா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து விளங்கும் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகையில், "அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்டர்புயூனர்ஸ் அமைப்பில் 52 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த அமைப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்." என்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ருக்‌ஷனா எய்ஸா, "இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் துறையினர் தங்கள் தகவல் பரிமாற்றங்களை மேம்படுத்தி கொள்ளவும் அதை எவ்வகையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட சிந்தனைகள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் அதிக திறமை உடையவர்கள். மேலும், இந்த நிகழ்ச்சி தொழில் துறையினருக்குப் பயனுள்ளதாக அமையும். தொழில் துறையினர் எந்த இடத்திலும் தங்களை திறமைகளை வெளிப்படுத்த தயக்கமின்றி முன் வரவேண்டும்." என்று பேசினார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...