பேரனுக்காக பவுலராக மாறிய கருணாநிதி - வீடியோ

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தேறியுள்ள நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தேறியுள்ள நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. 

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சளி தொந்தரவு காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதால் அவருக்கு தொண்டையில் ‘டியூப்’ மாட்டப்பட்டுள்ளது. தற்போது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் இன்னும் ஒரு சில மாதங்களில் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ‘டியூப்பை’ அகற்றிவிட மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

கருணாநிதியை அவரது மகள் செல்வி, மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தினமும் சென்று கவனித்து வருகின்றனர். கருணாநிதியின் பேரனும், நடிகர் அருள்நிதியின் மகனுமான மகிளனை (2) மு.க. தமிழரசு தினமும் தூக்கிக் கொண்டு கருணாநிதியுடன் விளையாட வைப்பது வழக்கம். இந்த நிலையில், கருணாநிதி தனது கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ பதிவை மு.க. தமிழரசு வெளியிட்டுள்ளார்.

நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதி பந்துவீச அதை கொள்ளுப்பேரன் கிரிக்கெட் மட்டையால் அடித்து மகிழ்கிறான். அப்போது, மகள் செல்வி கருணாநிதியை உற்சாகப்படுத்தும் வகையில் பேசி, நீங்கள் பவுலர், நாங்கள் பீல்டிங்கில் இருக்கிறோம். பந்தை போடுங்கப்பா என்கிறார். உடனே கருணாநிதி பந்து வீசுகிறார். இதை கொள்ளுப்பேரனும் கிரிக்கெட் மட்டையால் பந்தை அடிக்கிறான். ஓடி விழும் பந்தை தமிழரசுவின் மனைவி மோகனா எடுத்து கொடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் கருணாநிதி பந்தை வீசுவது போல் பாவலா செய்வதும், பந்தை வீசாமல் அடுத்த முறை வீசுவதும் சிரிப்பை உருவாக்குகிறது. உடனே செல்வியும் தமிழரசுவின் மனைவி மோகனாவும், எப்படி ஏமாற்றி பந்து வீசுகிறார் என்று சிரிக்கின்றனர். கருணாநிதி பந்து வீசும் போதெல்லாம் ‘சூப்பர்’ என்று செல்வி உற்சாகப்படுத்தி கை தட்டுகிறார். எப்படி பந்து வீசுகிறார் பாருங்கள் என்று மோகனாவும் பேசுகிறார். விளையாடியது போதுமா? என்று கேட்கிறார்கள். அப்போது விளையாடிக் கொண்டிருக்கும் கொள்ளுப் பேரன் தாத்தா பந்து போடுங்க என்று அழைக்கிறான். இந்தக் காட்சிகள் வீடியோ பதிவாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கருணாநிதி முன்பைவிட உற்சாகமாக இருக்கிறார் என்பதை வெளிக்காட்ட இந்த வீடியோ வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...