விலை வீழ்ச்சியால் தக்காளியை குளத்தில் கொட்டிய விவசாயிகள்

அதிக விளைச்சல் காரணமாக சந்தைகளில் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் தக்காளியை குளத்தில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி : அதிக விளைச்சல் காரணமாக சந்தைகளில் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் தக்காளியை குளத்தில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பெரும்பான்மையான பகுதிகளில் விளைந்த தக்காளியை பறிக்க செலவு அதிகமாக இருக்கிறது. தக்காளி விலை கிலோவிற்கு ரூ. 2 கிடைப்பதால் பறிக்காமல் அப்படியே வயலில் விட்டு விட்டு சென்று விடுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோட்டூர், புளியம்பட்டி, சிங்கலம், கதிரம்பட்டி போன்ற இடங்களில் தக்காளி அதிகளவில் பயிரிடப்பட்டும், போதிய விலை இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் தக்காளியை டிராக்டர், டிராக்டராக குளத்தில் கொட்டி வருகின்றனர்.

விளைச்சல் குறைவான நேரங்களில் அதிக விலை கிடைக்கும். விளைச்சல் அதிகமான நேரங்களில் குறைவான விலை கிடைத்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. விவசாயிகள் தக்காளியை சேமித்து வைக்க குளிர்சாதன வசதிகளையும், மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற முறையான பயிற்சியும் மத்திய, மாநில அரசுகள் அளிக்க முன்வரவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான், தங்கள் விளைவித்த பொருளை உரமாக்காமல், நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்வோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...