அரசு அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணையிலிருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பரம்பிக்குளம் அணையில் இருந்து ஆழியார் அணை வழியாக கேரளாவுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விட பட்டுள்ளது. கேரளாவின் மிரட்டலுக்கு அஞ்சி திறந்து விடப்பட்ட தண்ணீரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் அனைத்துக் கட்சி கூட்டமைப்பின் ஈடுபட்டனர். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரளாவிற்கு திறந்துவிட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட சென்றனர், அப்போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கே பாசன தண்ணீர் இல்லாத நிலையில் கேரளாவில் சில கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு அஞ்சி கோவை மாவட்ட ஆளுக்கட்சி அமைச்சரின் வாய்மொழி உத்தரவு படி கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும் என்றும், உடனடியாக கேரளாவிற்கு செல்லும் தண்ணீரை நிறுத்தாவிட்டால் எல்லைகளை மூடும் போராட்டத்தில் நடத்தப்படும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...