சிங்காநல்லுார் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பில் உள்ள கட்டிட விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் குடியிருப்பின் கட்டிட உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
கோவை: சிங்காநல்லுார் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பில் உள்ள கட்டிட விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் குடியிருப்பின் கட்டிட உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தனலட்சுமிபுரத்தில் 8.05 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது 'சுருதி என்கிளேவ்' குடியிருப்பு. இங்கு, 137 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டி இருப்பதாகவும், பொது ஒதுக்கீடு விதிகளின்படி, 30 அடி அகலப்பாதை ஒதுக்கவில்லை என்றும், விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை அடைத்து கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர், மாநகராட்சியில் முறையிட்டனர்.
இந்நிலையில், நகரமைப்பு பிரிவினர் குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்து, விதிமுறைக்கு மாறாக கட்டிடங்கள் கட்டியிருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் 'சுருதி என்கிளேவ்' கட்டிடத்தை கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், " உள்ளூர் திட்ட குழும அனுமதி, மாநகராட்சி கட்டிட அனுமதிக்கு மாறாக, விதிமீறலுடன், குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. எனவே, கட்டிடத்தின் அளவு மற்றும் திறந்தவெளி அளவுகளுடன் திருத்திய வரைபடத்தை, நகர ஊரமைப்புத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். பொது ஒதுக்கீடாக, 30 அடி அகலப்பாதையை, பொதுமக்கள் உபயோகிக்கும் வகையில், கோவை மாநகராட்சிக்கு தானப்பத்திரம் மூலம் ஒப்படைக்க வேண்டும்." என்று உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட வேண்டிய 30 அடி அகலப்பாதை வழங்கப்படவில்லை. எனவே, நகர ஊரமைப்பு ஆணையர் மற்றும் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் ஆகியோர் திட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து, கட்டிட அனுமதிக்கான உத்தரவை ரத்து செய்த மாநகராட்சி ஆணையாளர் கட்டிட உரிமத்தை ரத்து செய்ததோடு, திருத்திய வரைபடம் தயாரித்து உரிய ஆவணங்களுடன் உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தனலட்சுமிபுரத்தில் 8.05 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது 'சுருதி என்கிளேவ்' குடியிருப்பு. இங்கு, 137 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டி இருப்பதாகவும், பொது ஒதுக்கீடு விதிகளின்படி, 30 அடி அகலப்பாதை ஒதுக்கவில்லை என்றும், விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை அடைத்து கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர், மாநகராட்சியில் முறையிட்டனர்.
இந்நிலையில், நகரமைப்பு பிரிவினர் குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்து, விதிமுறைக்கு மாறாக கட்டிடங்கள் கட்டியிருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் 'சுருதி என்கிளேவ்' கட்டிடத்தை கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், " உள்ளூர் திட்ட குழும அனுமதி, மாநகராட்சி கட்டிட அனுமதிக்கு மாறாக, விதிமீறலுடன், குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. எனவே, கட்டிடத்தின் அளவு மற்றும் திறந்தவெளி அளவுகளுடன் திருத்திய வரைபடத்தை, நகர ஊரமைப்புத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். பொது ஒதுக்கீடாக, 30 அடி அகலப்பாதையை, பொதுமக்கள் உபயோகிக்கும் வகையில், கோவை மாநகராட்சிக்கு தானப்பத்திரம் மூலம் ஒப்படைக்க வேண்டும்." என்று உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட வேண்டிய 30 அடி அகலப்பாதை வழங்கப்படவில்லை. எனவே, நகர ஊரமைப்பு ஆணையர் மற்றும் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் ஆகியோர் திட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து, கட்டிட அனுமதிக்கான உத்தரவை ரத்து செய்த மாநகராட்சி ஆணையாளர் கட்டிட உரிமத்தை ரத்து செய்ததோடு, திருத்திய வரைபடம் தயாரித்து உரிய ஆவணங்களுடன் உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.