கோவையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் உரிமம் ரத்து

சிங்காநல்லுார் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பில் உள்ள கட்டிட விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் குடியிருப்பின் கட்டிட உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

கோவை: சிங்காநல்லுார் பகுதியில் அமைந்துள்ள தனியார் குடியிருப்பில் உள்ள கட்டிட விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் குடியிருப்பின் கட்டிட உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தனலட்சுமிபுரத்தில் 8.05 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது 'சுருதி என்கிளேவ்' குடியிருப்பு. இங்கு, 137 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்கப்பட்டது.



ஆனால், அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டி இருப்பதாகவும், பொது ஒதுக்கீடு விதிகளின்படி, 30 அடி அகலப்பாதை ஒதுக்கவில்லை என்றும், விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை அடைத்து கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர், மாநகராட்சியில் முறையிட்டனர்.

இந்நிலையில், நகரமைப்பு பிரிவினர் குடியிருப்பு வளாகத்தை ஆய்வு செய்து, விதிமுறைக்கு மாறாக கட்டிடங்கள் கட்டியிருப்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் 'சுருதி என்கிளேவ்' கட்டிடத்தை கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில், " உள்ளூர் திட்ட குழும அனுமதி, மாநகராட்சி கட்டிட அனுமதிக்கு மாறாக, விதிமீறலுடன், குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. எனவே, கட்டிடத்தின் அளவு மற்றும் திறந்தவெளி அளவுகளுடன் திருத்திய வரைபடத்தை, நகர ஊரமைப்புத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். பொது ஒதுக்கீடாக, 30 அடி அகலப்பாதையை, பொதுமக்கள் உபயோகிக்கும் வகையில், கோவை மாநகராட்சிக்கு தானப்பத்திரம் மூலம் ஒப்படைக்க வேண்டும்." என்று உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், மாநகராட்சிக்கு தானமாக வழங்கப்பட வேண்டிய 30 அடி அகலப்பாதை வழங்கப்படவில்லை. எனவே, நகர ஊரமைப்பு ஆணையர் மற்றும் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் ஆகியோர் திட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கட்டிட அனுமதிக்கான உத்தரவை ரத்து செய்த மாநகராட்சி ஆணையாளர் கட்டிட உரிமத்தை ரத்து செய்ததோடு, திருத்திய வரைபடம் தயாரித்து உரிய ஆவணங்களுடன் உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...