கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி: புளுவேல் விளையாட்டு காரணமா?

மதுரையில் கல்லூரி மாணவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததற்கு புளுவேல் விளையாட்டு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை: மதுரையில் கல்லூரி மாணவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததற்கு புளுவேல் விளையாட்டு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை நேதாஜிரோடு அருகில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தை மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று நேற்று விக்னேஷ்-ன் பெற்றோர்கள் அழகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் சக நண்பர்களின் பேஸ்புக் பக்கத்தில் தான் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இவரின் சக நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் வீட்டின் புட்டை உடைத்துப் பார்த்த பொழுது கையை பிளேடால் அறுத்து ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் கிடந்துள்ளார். அவரை மீட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவர் விக்னேஸ் தற்கொலை முயற்சிக்குக் காரணம் காதல் தோல்வியா? அல்லது புளுவேல் விளையாட்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...