பயிற்சியுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் - கோவை மாவட்ட ஆட்சியர்

பயற்சியுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

கோவை: பயற்சியுடன் விடா முயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று பள்ளி மாணவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அறிவுரை வழங்கியுள்ளார்.



கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெற்றிப் படிக்கட்டு பொதுத்தேர்வில் பங்கேற்கும் ஆதிதிராவிட உண்டு உறைவிட பள்ளி, பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதி மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் 2016-17 கல்வி ஆண்டில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், " தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து ஏழை எளிய மாணவ மாணவியர்களும் உயர்கல்வியை எளிதாக பெற வழிவகை செய்துள்ளது. இவ்விழா பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை சுடர் விடச்செய்யும் விழா. 

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் அசாத்திய திறமை பெற்றவர்களாகவும், எச்சூழலையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் விளங்குகின்றனர் என்பது சமீப காலமாக நிஜமாகி வருகின்றது. 

போதிய பயிற்சியும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க யாராலும் முடியாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இவ்விழாவிற்கு வருகை புரிந்துள்ள மாணவ மாணவியர்கள் அனைவரும் வரும் காலத்தில் இந்திய நாட்டின் முக்கிய பணிகளை அலங்கரிப்பவர்களாக திகழ வேண்டும்." என்றார். 

இவ்விழாவில் மாவட்ட காவல் ஆணையர் பெரியய்யா, கோயம்புத்தூர் மாவட்ட பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் ஆர்.மகாலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...