குப்பைக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி ஆற்றின் அவலம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் ஒருபகுதி பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் ஒருபகுதி பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். 

மேட்டுப்பாளையம் பகுதியில் பாவனி ஆறு பாயும் வழித்தடம் ஒன்று காந்தி மைதான் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே டாஸ்மாக் கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால், அங்கு மது அருந்த வரும் குடிமகன்கள், மதுவை அருந்திவிட்டு, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கவர்களை பவானி ஆறு பாயும் வழித்தடத்தில் வீசியெறிந்து செல்கின்றனர். இதனால், அங்கு, பவானி ஆறு பாயும் வழித்தடம் இருந்ததா என்ற சந்தேகம் எழும்படியான நிலை உருவாகியுள்ளது. மேலும், குடிபோதையில், போதை ஆசாமிகள் இந்தப் பகுதியில் மலம் கழித்துவிட்டு செல்கின்றனர்.



கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீராதரமாக விளங்கி வரும் பவானி ஆற்றின் பகுதியில் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால், உடல்நலப் பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பவானி ஆற்றின் கரையை தூய்மைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...