பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

பவானி ஆற்றின் குறுக்கே சோலையூரில் மூன்றாவது தடுப்பணை கட்டுமான பணிகளை துவங்கியுள்ள கேரள அரசை மத்திய,மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே சோலையூரில் மூன்றாவது தடுப்பணை கட்டுமான பணிகளை துவங்கியுள்ள கேரள அரசை மத்திய,மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு சோலையூர் பகுதியில் மூன்றாவது தடுப்பணை கட்டுவதற்கான பணியை துவங்கி விட்டது. ஏற்கனவே தேக்குவட்டை, மஞ்சகண்டி பகுதியில் இரண்டு தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளனர். இது ஐம்பது ஆண்டுகால கேரள அரசின் திட்டமாகும். 

தடுப்பணை கட்டுவதால் கோடைக் காலங்களில் கோவையில் குடிநீர் பிரச்சனை ஏற்படும். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும். பலமுறை அணை கட்ட முயன்றும், முடியாத நிலையில் 15 ஆண்டுகளுக்குக் காவிரி ஆறு பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாததை, கேரள அரசு சாதகமாக பயன்படுத்த முயல்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததே இப்பிரச்சனைக்குக் காரணமாகும். சிறுவாணி அணையில் 2 அடி தண்ணீர் வீணாக கேரள அதிகாரிகள் திறந்து விட்டதால், கோவையின் 10 நாட்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீர் வீணாக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணை பணிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இப்பிரச்சனை தொடர்பாக கோவையில் வருகின்ற 3-ம் தேதி தி.மு.க., அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...