பழங்குடியின இளைஞர் அடித்து கொலை: விரிவான விசாரணை தொடக்கம்

கேரள மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆதிவாசி மக்கள் மற்றும் போலீஸாரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார்.

கோவை: கேரள மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆதிவாசி மக்கள் மற்றும் போலீஸாரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசியதாவது :- கேரளா மாநிலம் அட்டப்பாடியில் பழங்குடியின இனத்தை சேர்ந்த மது என்ற இளைஞரை அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வந்துள்ளேன். விசாரணைக்கு தன்னுடன் ஆணையத்தின் உறுப்பினர்களும் வந்துள்ளனர். இன்று முதல் விசாரணை நடைபெறுகிறது. பழங்குடியின இளைஞர் மது அடித்து கொலை செய்யப்பட்டது மோசமான சம்பவமாகும். இது வருத்தத்திற்குரியது. 

இன்று மாலை பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஆட்சியர், காவல் துறையினர், ஆதிவாசி சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஆதிவாசி மக்களிடமும், காவல் துறையினரிமும் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். பழங்குடியின மக்களுக்கான செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும், பழங்குடியின மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு ஏற்கனவே செலவழிக்கப்படும் நிதி, கூடுதலாக ஒதுக்கப்படுவது குறித்து பிரதமர், துறை அமைச்சர் ஆகியோரிடம் கலந்தாலோசிக்கப்படும். கேரள பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்படும். இவ்வாறு தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...