மரத்தில் கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட நால்வர் பலி

காங்கயம் அருகே கோயிலுக்கு சென்று திரும்பியவர்களின் கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் கவிழ்ந்ததில் 4 வயது சிறுமி உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: காங்கயம் அருகே கோயிலுக்கு சென்று திரும்பியவர்களின் கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் கவிழ்ந்ததில் 4 வயது சிறுமி உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பெரியசோடகை, கஸ்பா காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்(30). இவர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று பழனி கோயிலுக்குச் சென்றுவிட்டு இன்று காலை ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை வெங்கடேஷ் ஓட்டினார். கார் காங்கயம் அருகே சென்னிமலை சாலையில் திட்டுப்பாறை என்ற இடத்தில் காலை 10:30 மணிக்கு சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் புளியமரத்‌தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.



இந்த விபத்தில், விபத்தில் காரில் பயணம் செய்த ரங்கநாதன், அவரது மனைவி ஜோதி (40), லட்சுமி (40) மற்றும் வெங்கடேசின் மகள் ஜெனிதா (4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். வெங்கடேஷ்‌ உட்பட 5 பேர் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்‌தி வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...