பள்ளி குழந்தைகள் பராமரித்து வரும் மூலிகை தோட்டம்

உதகை ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளி குழந்தைகள் மூலிகை தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகின்றனர்.

நீலகிரி: உதகை ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளி குழந்தைகள் மூலிகை தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 13 மாணவர்களுடன் மூடு விழாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது உதகை அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. ஆனால், தற்போது 102 மாணவ, மாணவியருடன் மீண்டெழுந்திருக்கிறது.

இங்குள்ள சுற்று வட்டார கிராமங்களில் வசிப்போரில் 90 சதவீதம் பேர் கூலி தொழிலாளர்கள். பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வீடுதோறும் சென்று தரமான ஆங்கில வழிக் கல்வி, ஊட்டச்சத்து உணவு, இலவச கல்வி வழங்குகிறோம். என பிரசாரம் செய்தனர். அதற்குப் பெற்றோர் மத்தியில் கிடைத்த நம்பிக்கையே இப்பள்ளியின் அசத்தலான வளர்ச்சிக்கு அச்சாணியாய் இருந்திருக்கிறது.

அதற்கேற்ப தற்போது ஆங்கில வழி கல்வியிலும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் பராமரிக்கப்படும் மூலிகை தோட்டத்தில் மாணவர்களை கொண்டே மூலிகை தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.



பள்ளி பி.டி.ஏ-வின் ஒத்துழைப்புடன் கராத்தே, யோகா, இசைக்கருவி மீட்டுவது போன்ற பயிற்சிகளும், ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் கணினி சார்ந்த கல்வியும் கற்பிக்கப்படுகிறது.

தேசிய பசுமைப்படை இளஞ்செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளும் கச்சிதமாய் செயல்படுகின்றன. இதன் விளைவு சரிந்து போன மாணவர் எண்ணிக்கை சதம் கடந்து நிற்கிறது.

இது குறித்து தலைமையாசிரியை சோபா கூறுகையில், "பள்ளியின் இதமான சுற்றுச்சூழல், தரமான கல்விக்கு கிடைத்த பலன் தான் இந்த மாற்றம். குறிப்பாக ஆங்கில வழிக்கல்வி பெற்றோரை திருப்திப்படுத்தியுள்ளது." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...