ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு வரவேற்பு

சொத்துக்களை ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது.

சொத்துக்களை ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன்மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 7 ஆயிரம் பத்திரங்கள் வீதம் ஆண்டுக்கு 30 லட்சம் ஆவணங்கள் பதிவாகிறது. பத்திரப்பதிவு செய்ய வரும் மக்கள் லஞ்சம் தரவில்லை எனில், அவர்களை அதிகாரிகள் இழுத்தடிப்பதாகவும் அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

பத்திரப்பதிவில் நிகழும் முறைகேடுகளைத் தடுத்து, லஞ்சத்தையும் ஒழிக்கும் வகையில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை தமிழக அரசு அமல்படுத்தியது. மிகவும் எளியமுறையில் உள்ள இந்த நடைமுறையால், பத்திரப்பதிவு செய்யப்படும் விவரங்களை அதன் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம். 

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த புதிய திட்டத்திற்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் பத்திரப்பதிவு செய்யும் முறைக்கு இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு தெரிவித்து கொள்கிறோம். அதே நேரம், ஆன்லைன் பதிவில் அவ்வப்போது ஏற்படும் சர்வர் பிரச்சினையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...