யானைகள் முகாமில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மறுசுழற்சிக்காக ஒப்படைப்பு

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் முகாமின் போது சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகள் மறுசுழற்சிக்காக நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெற்ற யானைகள் முகாமின் போது சேகரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகள் மறுசுழற்சிக்காக நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னுமிடத்தில் பவானி ஆற்றங்கரையோரம் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் பத்தாவது யானைகள் நலவாழ்வு முகாம் கடந்த மாதம் நான்காம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் இருந்து 31 யானைகளும், புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் என மொத்தம் 33 யானைகள் பங்கேற்றன. இந்த முகாம் கடந்த 20-ம் தேதி நிறைவடைகிறது. இதனால், முகாமில் பங்கேற்ற யானைகள் பலத்த ஏற்பாடுகளுடன், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 



இந்த நிலையில், யானைகள் முகாம் நடைபெற்ற பகுதியில் பிளாஸ்டிக், பாலிதீன் & பாட்டில்கள் என 53 மூட்டை அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டன. கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷின் வழிகாட்டுதலின்படி, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் ரவி மற்றும் வனப்பணியாளர்களுடன் இணைந்து நேட்சுரல் லவ்வர்ஸ் என்னும் தன்னார்வ அமைப்பினர்கள் 65 பேர் இப்பணியை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இக்கழிவுகள் இன்று நகராட்சி வசம் மறுசுழற்சிக்கு வழங்கப்பட்டது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...