அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர்கள் மனு

அரசு பள்ளி மாணவர்கள் 32 பேர் தங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: அரசு பள்ளி மாணவர்கள் 32 பேர் தங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை நஞ்சுண்டாபுரம் அனுப்பர்பாளையத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை செயல்படும் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கிலம், தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஆசிரியர்கள் நியமிக்கப் படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. 

இந்த நிலையில், அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் கூட இல்லை என்றும், உடனடியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரி 32 மாணவர்கள் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடந்த 19-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...