ஜெ., சிலை அவசரமாக வடிவமைக்கப்பட்டதால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஜெ., சிலை செய்வது சிற்பிகளுக்கு புதிது என்பதாலும், அவசரத்தில் வடிவமைக்கப்பட்டதால் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை: ஜெ., சிலை செய்வது சிற்பிகளுக்கு புதிது என்பதாலும், அவசரத்தில் வடிவமைக்கப்பட்டதால் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் பேசியதாவது:- 

கோவை,திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஆழியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்படும். சிறுவாணி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சிறுவாணி அணையில் வீணாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது.தமிழக லாரிகள் கேரளாவில் தாக்கப்பட்டது தொடர்பாக கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இப்பிரச்சனை பேசி தீர்க்கப்படும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலை செய்வது சிற்பிகளுக்கு புதியதாக இருக்கும் என்பதாலும், அவரது பிறந்த நாளுக்குள் சிலை திறக்க வேண்டுமென்ற அவசரத்தில் செய்ததாலும் சிறு மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். அப்படி பெரிய மாற்றங்கள் இருந்தால் அது சரி செய்யப்படும். என்று பேசினார்.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...