2 வயது சிறுத்தைப்புலி வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த பரிதாபம்

நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது. 

மலை மாவட்டமான நீலகிரியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது, சாலைகளுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், உதகையில் இருந்து குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான வேல்வியூ பகுதில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி ஒன்று வாகனத்தில் அடிப்பட்டு இருந்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த சிறுத்தைப்புலியின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மலை மாவட்டங்களில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் வனவிலங்குகள் பலியாகி வருவதாகவும், இதுபோன்று நிகழ்ந்தால்,   சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது வனத்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...