மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்களின் பயன்பாடு குறித்து கருத்தரங்கு

கோவையில் பிளாஸ்டிக் பயன்பாடு அல்லாத மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

கோவை : கோவையில் பிளாஸ்டிக் பயன்பாடு அல்லாத மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. 



நகரை தூய்மையாக வைக்கும் வகையில், பிளாஸ்டிக் பயன்பாடு அல்லாத மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள், தட்டுகள் போன்றவை கோவை ஸ்மார்ட்சிட்டி லிமிடெட் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காகித டம்ளர்கள் மற்றும் தட்டுகள், மற்ற தர பொருட்களைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.  இந்த நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, நகரின் வளத்தைப் பெருக்குவதற்காகவும், குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் இந்த தொழிலைப் பிரபலப்படுத்துவதற்காகவும், தொழில் தொடங்க ஆர்வாக உள்ள தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



அதன்படி, நேற்று மாலை அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரிக்கு எதிரே உள்ள அன்னபூர்ணா ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :- தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்பதற்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கிய காரணமாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் அனைத்து கடைகளில் விற்கப்படுகிறது. காரணம், பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவது நாகரீகம் ஆகிவிட்டது. எனவே, அதனை விநியோகிக்க தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், மக்கும் தன்மையுள்ள பைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கருத்தரங்கானது, குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் என்பதால் தொழில்முனைவோர்களுக்கு பரிந்துரை செய்யப்டுகிறது. இவ்வாறு கூறினார். 

இந்த நிகழ்ச்சியின் போது, மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள், தட்டுகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டன.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...