நிலத்தடி நீரை சேகரிப்பதில் கவனம் செலுத்தும் சிறுதுளி அமைப்பு

தமிழகத்தில் நிலத்தடி நீரின் வளம் கவலையளிக்கும் விதமாக இருக்கும் நிலையில், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறுதுளி அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

கோவை : தமிழகத்தில் நிலத்தடி நீரின் வளம் கவலையளிக்கும் விதமாக இருக்கும் நிலையில், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறுதுளி அமைப்பு ஈடுபட்டு வருகிறது. 



இந்தியாவில் பல்வேறு இடங்களில் போதிய அளவு மழை பெய்துள்ள நிலையிலும், இப்போதும் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், நிலத்தடி நீரையே விவசாயிகளும், பொதுமக்களும் நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நிலத்தடி நீர் குறைபாடுக்கு மக்கள் தொகைப் பெருக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. அதேவேளையில், சாலைகள் மற்றும் திறந்த வெளிப்பகுதிகளில் விழும் மழைநீர் பாதாள சாக்கடையில் கலந்து மாசடைவதுடன், பிற பகுதிகளுக்கும் பரவி சீர்கேட்டை உருவாக்குகின்றது. எனவே, நிலத்தடி நீரை சீரமைக்கும் முயற்சியாக, கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சேகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது, வரை சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 



கோவையில் பாறைகள் நிறைந்த பகுதிகளில் போர்வேல் மூலம் மழைநீர் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் மாநகராட்சி, சிஜிடபூள்யூ, கோவை ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 600-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மழைகாலங்களில் நிலத்தடி நீர் சேகரிக்கப்படுகிறது. சிறுதுளி அமைப்பின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...