வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து : தீயை அணைப்பதில் மாநகராட்சி அலட்சியம்

கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைப்பதில், மாநகராட்சி மெத்தனம் காட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைப்பதில், மாநகராட்சி மெத்தனம் காட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 



வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 654 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு உள்ளது. இதில், 238 ஏக்கர் பரப்பளவில் குப்பை பரவி காணப்படுகிறது. மாநகராட்சியின் 100 வார்டுகளில் தினசரி 850 டன் வரை குப்பை சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இந்த நிலையில், இந்தக் குப்பைக்கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகள் கொழுந்துவிட்டு எரிகின்றன. இதன் காரணமாக, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணயில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் வண்டிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைப்பதில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். சுமார், 3 1/2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து எரிந்து வரும் இந்த தீயினை முழுவதுமாக அணைக்க சுமார் 2 நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. 

இதனிடையே, குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், அவ்வப்போது பயங்கர வெடிசத்தமும் கேட்பதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...