சிறுவாணி நீரை திருடும் கேரளம்

சிறுவாணி அணையின் அவசர கால குழாய் வழியாக தண்ணீரை கேரளா முறைகேடாக திருடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை : சிறுவாணி அணையின் அவசர கால குழாய் வழியாக தண்ணீரை கேரளா முறைகேடாக திருடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணை கோவை நகர மக்களின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த நிலையில், நேற்று மாலை சிறுவாணி அணையின் அவசரகால குழாய் வழியாக, எந்த விதமான முன் அறிவிப்பு இன்றி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 



சிறுவாணி ஆற்றில் கலக்கும் இந்த நீரை, தமிழகத்திற்குள் வராமல் தடுக்க அட்டப்பாடியில் ஐந்து இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீரை தடுக்கும் விதமாக போர் கால அடிப்படையில் கேரள அரசு பணிகளை நடத்தி வருகிறது. 

தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் இனி வரும் காலங்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

எனவே தமிழக அரசு உடனடியாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவாணி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் சிறுவாணி ஆற்றில் கட்டப்படும் தடுப்பணை பணிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. 

அவ்வாறாக செய்யாவிடில் சிறுவாணி நீரை நம்பியிருக்கும் தமிழக நகரங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...