ஜெ., 70-வது பிறந்த நாள் விழா : கோவையில் அ.தி.மு.க., தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று அ.தி.மு.க., தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இன்று அ.தி.மு.க., தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். 



மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்க இருக்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நலத்திட்டங்களை வழங்க உள்ளார்.



இந்த நிலையில், கோவை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன்.அர்ஜுனன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து அண்ணா சிலை பகுதிக்கு ஊர்வலமாக சென்ற அ.தி.மு.க.,வினர் அங்குள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா, திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி அங்கிருந்த மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 



மேலும், இன்று மதியம் கோனியம்மன் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சியும், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன. 



இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க.,பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...