ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு

சொத்து தகராறு காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: சொத்து தகராறு காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் மைக்கேல் ஜோசப். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு அயோனா(11), ஸ்டெபினி(10) என்ற இரு மகள்கள் உள்ளனர். ஜோசப்-ன் மனைவி அவரைப் பிரிந்து திருப்பூரில் பணி புரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஜோசப் தான் வைத்திருந்த பேனா கத்தியைக் கழுத்தில் வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரிடம் இருந்து பேனா கத்தியை பிடுங்கி போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் ஜோசப்-ஐ மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, ஜோசப்-ன் சகோதரி அவருக்கு சேர வேண்டிய சொத்தை தராமல் ஏமாற்றுவதாகவும், இது தொடர்பாக கேட்டால் ஆட்கள் வைத்து மிரட்டுவதாகவும், அதனாலேயே தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்தது. 

கடந்த சில மாதங்களாக மனு அளிக்க வருபவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருவதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மனு அளிக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற தற்கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...