கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேரப் போக்குவரத்துக்கு அனுமதி

நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லட்டி மலைப்பாதையில் இன்று முதல் 4 நாட்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கல்லட்டி மலைப்பாதையில் இன்று முதல் 4 நாட்களுக்கு இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மலைப் பாதைகளையும், அதிக கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மாவட்டமாகும். குறிப்பாக, கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைகளை கொண்ட மலைப் பாதையாகும். இந்த மலைப்பாதையில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், இந்த மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்லவும், இரவு 9 மணிக்கு மேல் வாகனங்களை இயக்கவும் தடை விதித்தது.

இந்த நிலையில், உதகையை அடுத்த மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா வரும் திங்கட்கிழமை நடைபெறுவதையொட்டி இன்று முதல் அப்பகுதில் கோவில் திருவிழா களைக் கட்டியுள்ளது. ஆகவே, இந்தக் கோவில் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் கல்லட்டி மலைப்பாதையில் இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்திற்கு தடையை நீக்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பலத்த பாதுகாப்புடன், காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பயணிகள் பாதுகாப்புடன் செல்ல அறிவுரைகள் வழங்கிய பின்னரே, கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...