காரமடை அரங்கநாதர் கோவிலில் கொடியேற்று விழா : பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா முழக்கம்

கோவை காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகாத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்று விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவை: கோவை காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகாத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்று விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. 



கொங்கு மண்டலத்தின் பிரசித்தி பெற்ற வைனவத்திருத்தளமான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகா திருத்தேரோட்டம் நிகழ்ச்சியினை முன்னிட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் உற்சவ மூர்த்தியாக கோவில் முன் மண்டபத்தில் எழுந்தருளி கருடாழ்வாருக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளித்தார். அதன்பின்னர், கோவில் கொடிமரத்தின் அடியில் உள்ள கருடாழ்வருக்கு பால், திருமஞ்சனம் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 



இதனைத் தொடர்ந்து, கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியை கோவில் பட்டர் மற்றும் பொதுமக்கள் கோவிலை சுற்றி எடுத்து வலம் வந்தனர். பின்னர், மதியம் பன்னிரெண்டு நாற்பது மணிக்கு அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் மற்றும் தாசர்களின் சங்கொலி முழங்க கருடாழ்வார் கொடி அரங்கநாதர் கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வின் போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசங்களை எழுப்பி அரங்கநாதரை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...