ஆசிரியர் திட்டியதால் குளிர் பானத்தில் எலி மருந்து கலந்து குடித்த மாணவிகள்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த ஐந்து மாணவிகள் ஒன்றாக குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த ஐந்து மாணவிகள் ஒன்றாக குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையிலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் 5 பேரை ஆசிரியர் நேற்று திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அந்த ஐந்து பேரும் கடையில் எலி மருந்தை வாங்கி, வகுப்பறையிலேயே வைத்து குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விடவே அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த ஐந்து பேரையும் பள்ளி நிர்வாகம் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. பின்னர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அந்த ஐந்து மாணவிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனை சென்ற மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.



அப்போது அங்கிருந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...