இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே 13 இலக்க எண்கள் : பி.எஸ்.என்.எல்.,

நாடு முழுவதும் தொலைப்பேசி எண்கள் இனி 13 இலக்க எண்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தொலைப்பேசி எண்கள் இனி 13 இலக்க எண்களாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் தற்போது செல்போன்களுக்கான எண்கள் 10 இலக்கங்கள் கொண்டதாக வழங்கப்படுகின்றன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 10 இலக்க எண்ணில்தான் வாடிக்கையாளர்களுக்கு சிம்கார்டு எண்களை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்கள் வழங்கப்பட இருப்பதாகவும், எண்கள் மாற்றும் நடைமுறை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் முடிவடையும் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இந்த தகவல்களுக்கு அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை உரசி பணம் எடுக்கும் இயந்திரங்கள், சிறிய எலக்ட்ரிக் மீட்டர், மற்றும் இண்டர்நெட் பயன்பாடுள்ள இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகள் போன்ற இயந்திர பயன்பாடு எண்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...