பள்ளிகளுக்கு இடையிலான 18-ஆம் ஆண்டு இசைப் போட்டிகள் 25-ம் தேதி தொடக்கம்

கோவையில் பள்ளிகளுக்கு இடையிலான 18-ம் ஆண்டு இசை நிகழ்ச்சி போட்டிகள் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது.

கோவை : கோவையில் பள்ளிகளுக்கு இடையிலான 18-ம் ஆண்டு இசை நிகழ்ச்சி போட்டிகள் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. 

ரோட்டரி கிளப் ஆப் கோவை, கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் விளையாட்டு நல கூட்டமைப்பு இணைந்து இந்தப் போட்டியை நடத்துகின்றன. வரும் 25-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. 

குழந்தைகளுக்கான போட்டிகள், மாணவ, மாணவிகள் இணைந்து செயல்படும் போட்டிகள், கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், மாணவர்களுக்கான போட்டிகள், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி பிராந்தியம், திருப்பூர் மாவட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகிறது. இதேபோல, ஸ்லோ மார்ச், குயிக் மார்ச், போன்ற பயிற்சிகளும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 

இதில், சிறப்பாக செயல்படும் மாணவர்களின் முதல் 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், சுழற்கோப்பைகள் மற்றும் ரொக்கம் பரிசாக வழங்கப்படும். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...