நீதிமன்ற உத்தரவின்படி, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட கட்டிடம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட கட்டிடம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. 

உதகை குந்தா ஹவுஸ் சாலையில் எம்.சிவராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் பின்புற பகுதியில் அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டதால், அப்பகுதியை நகராட்சி ஊழியர்கள் நேற்று இடித்தனர். நகராட்சி ஆணையர் சி.ரவி தலைமையில், நகராட்சி ஊழியர்கள், காவல் ஆய்வாளர் ரவீந்தரன் மற்றும் போலீஸ் பாதுகாப்பில் கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

இது குறித்து நகராட்சி ஆணையர் சி. ரவி கூறியதாவது :- சிவராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பின்புறப் பகுதி விதிகளை மீறி அனுமதியின்றி கட்டப்பட்டதாக பி.ஜெயராம் என்பவர் உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் அளிக்கப்பட்டது. தீர்ப்பில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை இடிக்க உத்தரவிடப்பட்டது. அதன் பேரில், அனுமதியற்ற பகுதி இடிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...