சேலம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சேலம் - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சேலம் - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ரயில் எண் - 06011 எர்ணாகுளம் சந்திப்பு - சேலம் சிறப்பு கட்டண ரயில் வரும் ஏப்ரல் 08-ம் தேதி முதல் ஜுலை 01-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 08-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.45 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 06.40 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

இதேபோல, ரயில் எண் - 06012 சேலம் - எர்ணாகுளம் சந்திப்பு சிறப்பு கட்டண ரயில் வரும் ஏப்ரல் 09-ம் தேதி முதல் ஜுலை 02-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 09-ம் தேதி (திங்கள்கிழமை) இரவு 10.30 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 07.45 மணிக்கு சென்றடைகிறது. 

இதில், 4 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 13 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலானது, ஆலுவா, திரிசூர், ஒட்டபாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...