ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை செய்வதே எங்களது கொள்கை: கமல்

ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை செய்வதே எங்களது கொள்கை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை செய்வதே எங்களது கொள்கை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நடிகர் கமலஹாசன், மதுரையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்தகட்ட பயணம் மற்றும் நடவடிக்கை குறித்து நடந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- புதுக்கட்சி என்பதால், காவிரி குறித்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு இல்லாவிட்டாலும், எங்கள் பணி தொடரும். புதுக்கட்சியாக சென்னைக்கு செல்கிறேன். வேலைகளை தொடர்வதற்கான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். அடுத்த மாத மத்தியில் பயணம் தொடரும். 

அடுத்த மாத நடுவில் வந்து கிராமங்கள் தத்தெடுப்பு திட்டம் தொடரும். அரசு ஒத்துழைப்பு வழங்கினால், அதற்கு நன்றி தெரிவித்து கொள்வோம். இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும், கிராமங்கள் தத்தெடுப்பது தொடரும். கிராம நிர்வாகிகளுடன் ஒப்பந்தம் போட்டு, அவர்களுக்கு தேவையான உதவி செய்வோம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களை செழிக்க வழி செய்வோம்.

கட்சி உயர்மட்ட குழுவில் அறிஞர்கள், படித்தவர்கள், அறிவுள்ளவர்கள் சமூகஆர்வம் உள்ளவர்கள் இடம்பெற்றுள்ளனர். நாங்கள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். கட்சியைப் பொறுத்தவரை நான் தலைவனாக இருப்பேன். நேற்று கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தைக் காண அல்ல. உணர்வுப்பூர்வமாக மாற்றம் வர வேண்டும் என விரும்பியவர்கள் கூடினர். எத்தனை பேர் வந்தனர் என்பதை பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. விஞ்ஞான ரீதியாக எத்தனை பேர் கூடினர் என்பதை தெரிவிப்போம். சாதாரண மக்களுக்கு தெரிந்த நியாயத்தை வர்த்தகமாக்கிவிட்டனர். அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வோம். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் என்ஜிஓ பாணியில் இருப்பதில் என்ன தவறு.

நான் இடதா வலதா, என்றால் நான் மையத்தில் உள்ளேன். கிராமியம் என்பது தேசியமே. திராவிடத்தை இழக்கவில்லை. தேசியத்தையும் இழக்கவில்லை. நாடு முழுவதையும் திராவிடம் ஆக்கிரமித்துள்ளது. கட்சியில் உள்ள எட்டு முனை நட்சத்திரங்கள் தென்னாட்டு மக்கள். ஆறு கைகள் புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...