அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை, 10:30 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் கூட்டம் தொடங்கியது.

இதில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி. ராமக்கிருஷ்ணன், திருமாவளவன், சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம், 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதற்காக குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்களை நேரில் சந்திக்க வேண்டும். எனக் கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறும்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதற்காக அனைத்து கட்சி தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் குறித்து சரியான வாதம் எடுத்து வைக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சரியான வாதம் வைக்கப்பட்டதால் தான் நல்ல தீர்ப்பு கிடைத்ததாகப் பதிலளித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...