விசைத்தறி நெசவு கூலி ஒப்பந்தம் தொடர்பாக சுமூக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்

கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி நெசவு கூலி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர்: கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி நெசவு கூலி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூரில் த.மா.கா. நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு கூட்டி உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் த.மா.கா. பங்கேற்கும். இந்தக் கூட்டத்தின் மூலமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். மேலும் இந்தக் கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளது கூட்டத்திற்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்றும் மற்றும் நாளையும் நடைபெற உள்ள கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி நெசவு கூலி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும். தமிழக அரசு விசைத்தறி தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவுகள் எடுக்க வேண்டும். 

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் வை-பை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது மாணவர்களின் வருங்கால கல்விக்கு உதவும் வகையில் அமையும் என்று த.மா.கா. கருதுகிறது. 4 மாவட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த வை-பை வசதி எந்த பயனையும் தராது. 

பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கான கட்டண உயர்வு ஏற்புடையது அல்ல. உடனடியாக பழைய கட்டணத்தை அமல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் மேல் முறையீட்டிற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் கமலஹாசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு த.மா.கா. சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...